இந்தியாவில் அதிகம் தூக்கமின்மை காணப்படும் மாநிலம் தமிழ்நாடு – இந்தியாவில்அதிகதூக்கமின்மைகாணப்படும்மாநிலம் !
இந்தியாவில் அதிகம் தூக்கமின்மை காணப்படும் மாநிலம் தமிழ்நாடு – இந்தியாவில் அதிக தூக்கமின்மை காணப்படும் மாநிலம்
இது ஆண்களின் முடி உதிர்வுக்கு பெரிய காரணமாக மாறி வருகிறது.
5,11,897 ஆண்களிடம் Traya நடத்திய பகுப்பாய்வின்படி, தூக்கக் குறைபாட்டில் 20 மாநிலங்களிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவின் நகரங்களிலேயே கோவை மற்றும் சென்னை ஆகியவையே மிக மோசமான தூக்க நிலையைக்கொண்ட இரண்டு நகரங்களாகத் திகழ்கின்றன. மேலும், முடி உதிர்தலால் அவதிப்படும் ஆண்களுக்கு, அது குறித்து யாரும் அவர்களுக்குத் தெரிவிக்காத ஒரு முக்கியக் காரணமாகத் தூக்கமே அமைந்திருக்கலாம்.
.
சென்னை, ஏப்ரல் 2026 – 5,11,897 ஆண் பங்கேற்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இந்திய ஆண்களின் உறக்க முறைகள் குறித்த தனது பகுப்பாய்வின் முடிவுகளை ‘Traya Health’ நிறுவனம் இன்று வெளியிட்டது. 50 நகரங்கள் மற்றும் 20 மாநிலங்களை உள்ளடக்கியுள்ள இந்தத் தரவுத் தொகுப்பு, ஒரு நுகர்வோர் சுகாதார நிறுவனத்தால் இந்திய ஆண்களை மையமாகக் கொண்டு தொகுக்கப்பட்ட, வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியம் சார்ந்த மிகப்பெரிய பகுப்பாய்வுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண்களில் 30.37 விழுக்காட்டினர், ஒவ்வொரு இரவும் குறைந்தது ஒரு முறையாவது விழித்துக்கொள்வதன் மூலம் தங்கள் தூக்கம் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். மேலும் 11.78 விழுக்காட்டினர் தூங்குவதற்குச் சிரமப்படுகின்றனர். இவ்விரண்டையும் சேர்த்துப் பார்க்கையில், 42.15 விழுக்காட்டினர் தொடர்ந்து தரமற்ற தூக்கத்தை அனுபவிக்கின்றனர்; இது நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மிக உயர்ந்த விகிதமாகும்.
இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது இந்த வேறுபாடு தெளிவாகக் காணப்படுகிறது. ராஜஸ்தான் — இந்தியாவில் சிறந்த தூக்க நிலை கொண்ட மாநிலமாகக் கருதப்படும் இடத்தில் — வெறும் 23.03% ஆண்கள் மட்டுமே குறைவான தூக்கத்தைப் பதிவு செய்கிறார்கள். அதே நேரத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ஆண், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரை விட சுமார் 1.8 மடங்கு அதிகமாக தூக்கக் குறைபாட்டை அனுபவிக்கும் வாய்ப்பு கொண்டிருக்கிறார்.
கோயம்புத்தூர் இந்தியாவில் மிகவும் குறைவாக தூங்கும் நகரமாக 42.73% தூக்கக் குறைபாட்டுடன் முதல் இடத்தில் உள்ளது. சென்னை 42.48% உடன் அடுத்ததாக உள்ளது; சேலம் 39.30% உடன் தொடர்ந்து வருகிறது. இந்த தரவுத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள இந்த மூன்று தமிழ்நாடு நகரங்களும், அனைத்து வட மற்றும் மத்திய இந்திய நகரங்களையும், முக்கிய மெட்ரோ நகரங்களையும் விட அதிக தூக்கக் குறைபாடு கொண்ட நகரங்களாகத் திகழ்கின்றன.
டெல்லியில் 27.06% பேர் தரமற்ற உறக்கத்தைச் சந்திக்கின்றனர். மும்பையில் இது 32.47% ஆகவும், பெங்களூரில் 33.33% ஆகவும் உள்ளது. இடைவிடாத பணி கலாச்சாரம் மற்றும் நகர்ப்புற மன அழுத்தத்துடன் தொடர்புடைய இத்தகைய நகரங்கள் அனைத்தும், சென்னை மற்றும் கோயம்புத்தூரை விட அளவிடத்தக்க வகையில் சிறந்த உறக்கத்தையே பெறுகின்றன. இது வெறும் பணி அழுத்தத்தைச் சார்ந்த ஒரு விஷயம் அல்ல. இதைவிடவும் பிராந்திய ரீதியான, இன்னும் ஆழமான கட்டமைப்பு சார்ந்த ஏதோ ஒன்று இங்கே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
| City | Disturbed Sleep | Difficulty Falling Asleep | Total Poor Sleep |
| கோயம்புத்தூர் | 30.44 % | 12.29% | 42.73% |
| சென்னை | 30.86% | 11.62% | 42.48% |
| சேலம் | 28.96% | 10.34% | 39.30% |
| விஜயவாடா | 29.79% | 10.12% | 39.91% |
| கொச்சி | 25.41% | 10.30% | 35.71% |
| ஹைதராபாத் | 27.56% | 9.12% | 36.68% |
| பெங்களூரு | 24.50% | 8.83% | 33.33% |
| மும்பை | 24.45% | 8.02% | 32.47% |
| டி ல்லி | 21.02% | 6.04% | 27.06% |
| ஜெய்ப்பூர் | 17.82% | 5.38% | 23.20% |
| வாரணாசி | 17.78% | 5.59% | 23.37% |
தரவரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது; எனினும், இப்பிரச்சினை தெற்குப் பகுதி முழுவதிலும் பரவியுள்ளது. தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களும் தேசிய அளவில் முதல் ஐந்து இடங்களை வகிக்கின்றன; ஆனால், வட மற்றும் மத்திய இந்தியாவில் பதிவாகியுள்ள தூக்கத்தின் தரத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் இவற்றில் எதுவும் அமையவில்லை.
பெரும்பாலான தேசிய சுகாதாரக் குறியீடுகளில் முன்னிலையில் இருக்கும் கேரள மாநிலம், இப்போதும் 35.17% மோசமான உறக்க விகிதத்தைப் பதிவு செய்கிறது. கர்நாடகம் 33.17% என்ற விகிதத்தைப் பதிவு செய்கிறது. ஒரு மண்டலமாகப் பார்க்கையில், தென் இந்தியா மொத்தம் 37.2% மோசமான உறக்க விகிதத்தைப் பதிவு செய்கிறது; இது வட இந்தியாவின் 25.5% என்ற விகிதத்தைவிட ஏறத்தாழ 12 சதவீதப் புள்ளிகள் அதிகமாகும். பெருநகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்கள் என இரண்டிலும் இதே போக்கு நீடிப்பது, இது ஏதோ தற்செயலான நிகழ்வு அல்லாமல், ஒரு கட்டமைப்பு சார்ந்த பிரச்சினையே என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
| State | Disturbed Sleep | Difficulty Falling Asleep | Total Poor Sleep |
| தமிழ்நாடு | 30.37% | 11.78% | 42.15% |
| ஆந்திரப் பிரதேசம் | 29.77% | 9.46% | 39.23% |
| தெலுங்கானா | 27.61% | 9.11% | 36.72% |
| கேரளம் | 25.05% | 10.12% | 35.17% |
| கர்நாடகா | 24.36% | 8.81% | 33.17% |
| மகாராஷ்டிரா | 23.38% | 7.56% | 30.94% |
| குஜராத் | 19.84% | 6.87% | 26.71% |
| உத்தரப் பிரதேசம் | 18.66% | 5.72% | 24.38% |
| ராஜஸ்தான் | 17.62% | 5.41% | 23.03% |
| Zone | Total Poor Sleep |
| தென்னிந்தியா | 37.2% |
| மேற்கு இந்தியா | 29.9% |
| கிழக்கு இந்தியா | 28.2% |
| மத்திய இந்தியா | 26% |
| வட இந்தியா | 25.5% |
மோசமான உறக்கம் ஆண்களுக்கு முடி உதிர்வை ஏற்படுத்துவது எப்படி?
முடி சுழற்சி முறையில் வளர்கிறது. தீவிர வளர்ச்சி நிலை ‘அனஜென்’ (anagen) என்றும், உதிரும் நிலை ‘டெலோஜென்’ (telogen) என்றும் அழைக்கப்படுகிறது. இயல்பான சூழலில், எந்தவொரு நேரத்திலும் பெரும்பாலான முடி வேர்கள் வளர்ச்சி நிலையிலேயே நீடித்திருக்கின்றன. நாள்பட்ட தூக்கமின்மை, இந்தச் சமநிலையை இரண்டு நேரடி வழிகளில் சீர்குலைக்கிறது.
முதலில், உடலின் முதன்மை மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் உயர்ந்த நிலையிலேயே இருப்பதால், முடி வளர்ச்சிப் பருவம் பாதியிலேயே முடிந்து, அதிக முடியின் வளர்ச்சி முன்கூட்டியே உதிரத் தொடங்குகின்றன. இரண்டாவதாக, ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கைக்குக் காரணமான DHT என்ற ஹார்மோனை ஒழுங்குபடுத்தும் உடலின் திறன் பலவீனமடைகிறது. இதன் விளைவு: அதிக முடி உதிர்கிறது, குறைவாக மீண்டும் வளர்கிறது.
மோசமான உறக்கத்தை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கும் தமிழ்நாட்டு ஆண்களில் 42.15 விழுக்காட்டினருக்கு, இது ஏதோ தொலைவில் உள்ள ஒரு ஆபத்து அல்ல. மாறாக, இது ஒவ்வொரு இரவும் அமைதியாக நிகழ்ந்துகொண்டிருக்கும் — பெரும்பாலான நேர்வுகளில் எவ்வித நோயறிதலும் இன்றியே தொடரும் — ஒரு தொடர் செயல்முறையாகும்.
தூக்கம் ஒரு மூல காரணமாக: Traya-வின் மருத்துவப் பார்வை
டிராயாவில், முடி உதிர்தல் என்பது உச்சந்தலையில் ஏற்படும் பிரச்சனையாக அல்லாமல், உடல் முழுவதையும் பாதிக்கும் ஒரு பிரச்சனையாகக் கண்டறியப்படுகிறது. ஒவ்வொரு நோயாளிக்கும் ஆராயப்படும் அடிப்படைக் காரணங்களில் தூக்கமும் ஒன்றாகும், ஏனெனில் சீர்குலைந்த தூக்கம் தனித்துச் செயல்படுவதில்லை. அது முழு அமைப்பையும் பாதிக்கிறது.
கார்டிசோல் சீரின்மை: துண்டுதுண்டான உறக்கம், இரவில் கார்டிசோல் அளவு இயல்பு நிலைக்குத் திரும்பும் செயல்முறையைத் தடுக்கிறது. நாள்பட உயர்ந்திருக்கும் கார்டிசோல் அளவு, மயிர்க்கால்கள் வளர்ச்சிக் கட்டத்திலிருந்து உதிரும் கட்டத்திற்கு மாறுவதை விரைவுபடுத்துகிறது. மிக முக்கியமாக, இந்த விளைவு 2 முதல் 3 மாதங்கள் தாமதமாகவே வெளிப்படுகிறது; இதனால்தான் பெரும்பாலான ஆண்கள் தங்கள் முடி உதிர்வதற்கும் தங்கள் உறக்கத்திற்கும் இடையிலான தொடர்பை உணராமல் தவறவிடுகின்றனர்..
DHT உணர்திறன் அதிகரித்தல். சரியான தூக்கம் இல்லாதது ஆண்ட்ரோஜன் ஒழுங்குமுறையைச் சீர்குலைத்து, DHT-க்கு உடலின் உணர்திறனை அதிகரிக்கிறது. ஏற்கனவே முடி உதிர்தல் பிரச்சனை உள்ள ஆண்களுக்கு, இது அந்தச் செயல்முறையை வெளிப்படையாக வேகப்படுத்துகிறது.
● முடி வேர்களின் பழுது சரிசெய்தல் பாதிப்பு: ஆழ்ந்த தூக்கத்தின் போது செல்கள் புதுப்பிப்பு, தலையோட்டில் இரத்த ஓட்டம், மற்றும் வளர்ச்சி ஹார்மோன் சுரப்பு நடைபெறுகின்றன. ஆனால் சிதைந்த தூக்கம் இந்த பழுது சரிசெய்யும் செயல்முறையை ஒவ்வொரு இரவும் இடைநிறுத்துகிறது. இதனால், மாதங்கள் கடந்து செல்லும் போது முடி வேர்களின் ஆரோக்கியம் படிப்படியாக குறைகிறது.
இணைந்த அடிப்படை காரணிகள்: தூக்கக் குறைபாடு, சத்துகள் உறிஞ்சும் திறனை பாதித்து, மனஅழுத்த ஹார்மோன்களை அதிகரித்து, ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கிறது. இதனால், மற்ற அனைத்து அடிப்படை காரணிகளையும் ஒரே நேரத்தில் சிகிச்சை செய்யுவது மேலும் கடினமாகிறது.
ABOUT TRAYA HEALTH
Traya Health is India’s leading hair loss solution brand, combining Ayurveda, Dermatology and Nutrition into a single customised plan. Founded on the principle that hair loss is a symptom of deeper internal imbalances, Traya has treated 12 lakh+ of Indians and built one of the country’s largest proprietary datasets on hair health, gut function, and lifestyle indicators.


