HomePress Release
மாநில அளவிலான போட்டிக்கு நின்னைக்கரை நடுநிலைப்பள்ளி மாணவிகள் தகுதி!


மாநில அளவிலான போட்டிக்கு நின்னைக்கரை நடுநிலைப்பள்ளி மாணவிகள் தகுதி

பள்ளிக்கல்வித்துறை நடத்தும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளில் இன்று செங்கல்பட்டு மாவட்ட அளவிலான மாணவிகளுக்கான எறிபந்து (த்ரோபால்) போட்டிகள் செங்கல்பட்டு கற்பகவிநாயகா கல்லூரியில் நடைபெற்றது.
இதில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற நின்னைக்கரை அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவியருடன் விளையாடி வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்



