“பராசக்தி” திரைப்பட விமர்சனம்…





“பராசக்தி” திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் :- சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன், பிருத்வி
பாண்டியராஜன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் :- சுதா கொங்கரா.
ஒளிப்பதிவு :-
ரவி.கே.சந்திரன்
மியூசிக் : – ஜி.வி. பிரகாஷ் 100.வது. மியூசிக்கல்…
படத்தொகுப்பு :-
. சதிஷ் சூரியா.
தயாரிப்பு : டான் பிக்சர்ஸ் – ஆகாஷ் பாஸ்கரன்.
இந்தியாவில் இந்தி திணிப்புக்கு எதிராக போராடும் மாணவர் அமைப்பை தலைமை தாங்கி வழிநடத்தும் சிவகார்த்திகேயன்,
தனது தோழனின் இழப்பால் போராட்டத்தை கைவிட்டுவிட்டு
ரயில்வே துறையில் சாதாரண ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சில
வருடங்களுக்குப் பிறகு கல்லூரியில் படிக்கும் சிவகார்த்திகேயனின்
தம்பி அதர்வா, இந்தி திணிப்புக்கு எதிராக தனது கல்லூரி தோழர்களுடன் இணைந்து பல்வேறு
போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். தம்பியின் செயலை கண்டு கவலைக்
கொள்ளும் சிவகார்த்திகேயன், அவரை கண்டிக்கிறார்.இருவருக்கு இடையில்
பிறகு சண்டை வருகிறது. சமாதானம் வந்து
இருவரும் சேர்ந்து இந்தி போராட்டத்தில் ஈடுபடுகிறார்.
இதற்கிடையே, போராட்டங்களை கட்டுப்படுத்தி, போராட்டக்காரர்களோடு ஒன்று சேர்ந்து வேறோடு அழிப்பதற்காக
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியான
ஜெயம் ரவி, தனது பணியில் வெகுவாக வெறித்தனமாக மத்திய அரசின் பேரில் ஈடுபட்டு செயல்படுகிறார்.
இந்த நிலையில், மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கையினால் தமிழர்கள் மேல் பல்வேறு
வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிவகார்த்திகேயனும்
இந்தி மொழியால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படுகிறார். மறுபக்கம் அவரது
தம்பி அதர்வா மற்றும் அவரது நண்பர்கள் இந்தி திணிப்புக்கான
தங்களது
போராட்டங்களை தீவிரப்படுத்த, அண்ணன் சிவகார்த்திகேயன் என்ன செய்தார்,
என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்வது தான் “பராசக்தி”.
கதைக்களம் …
சிவகார்த்திகேயன்
செழியன் என்ற கதாபாத்திரத்தில்
மொழிப்பற்று மிக்க மாணவராக நடித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் துடிப்பு மிக்க நடிப்பு அவரது
இந்த கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.
அரசியல் பின்னணி கொண்ட கதைக்களத்தில்
கனகச்சிதமாக மிக பொருத்தமாக பொருந்தியிருக்
கிறார்.
சிவகார்த்த்கேயன், மாணவ போராளியாகவும் சரி, சாமானிய மத்திய அரசு ஊழியராகவும் சரி, தனது வசன
உச்சரிப்பு மற்றும் உடல் மொழி மூலம் செழியன் என்ற கதாபாத்திரத்தை செதுக்கியிருக்கிறார்.
சிவகார்த்திகேயன்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார்
ரவி மோகன், குறைவான வசனம் மற்றும் அளவான
நடிப்பின் மூலம் வில்லத்தனத்தை அசத்தலாக நடிப்பிலும் சிறப்பாக வெளிக்காட்டியிருக்
கிறார். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீதான தனது
கடுமையான
கோபத்தை தனது கண்பார்வையின் மூலமாகவே வெளிக்காட்டியிருக்
கிறார். ரவி மோகனின் ஒவ்வொரு செயலும்,
அவர் மீது படம் பார்க்கும் ரசிக பெருமக்களுக்கு அதித கடும் கோபத்தை ஏற்படுத்துகிறார்.
செம்மை
அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதர்வா, இந்தி திணிப்புக்கு எதிராக பேசும் அதித வசனங்கள் அனைத்தும் கவனம் ஈர்க்கிறார். சிறப்பு தோற்றத்தில்
நடித்திருக்கிறார். ராணா டக்குபதி, ஃபாசில் ஜோசஃப்,
தனஜெயன் ஆகியோர் அனைவரும் திரைப்பட இருக்கும் தனி ஈர்ப்பு கவனிக்க படுகிறார்கள்.
நாயகியாக நடித்திருக்கிறார். ஸ்ரீலீலா, திரைக்கதையோடு பயணிக்கும் பொழுது
வலுவான வாழ்வியல் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து தனித்து சிறப்பாக மனதில் நிற்கிறார்.
முகபாவத்தில் ரசிகர்களின் மனதில் நிற்கிறார்.
ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன், 1960-க்கு முந்தைய காலக்கட்டங்களில்
நடந்த மனித வாழ்க்கை உளவியல் வாழ்வியல் மக்கள் தனது கண்ணில்
கலர் வண்ணம் நிற்க வைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர். ரவி.கே.சந்திரன்
பயணித்த உணர்வை படம் பார்ப்பவர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது. பின்னணி இசை உணர்வுப்பூர்வமாக பயணித்தை
வைத்திருக்கிறார் இந்த கதைக்களத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.
ஜிவி.பிரகாஷ்குமார்.
அரசியல் பின்னணி கொண்டு வந்த திரைகதைக்களத்தை சுவாரஸ்யமாக
மட்டும் இல்லாமல் விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்லும் விதத்தில்
படத்தொகுப்பாளர் சதிஷ் சூர்யா காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
கலை இயக்குநர் எஸ்.அண்ணாதுரை, அந்த காலத்து கட்டிடங்கள், ரயில் நிலையம், ரயில் என அனைத்து விஷயங்களையும் மிக நுணுக்கமாக
துள்ளிமாக கையாண்டிருப்பது உண்மையில் நெருடலாக இருக்கிறது.
ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா மற்றும் ஒப்பனை கலைஞரின்
பணிபுரிந்தவர்
அவரின் கவனம் திசை திருப்பி ஈர்க்கிறார்.
சுதா கொங்குரா மற்றும் அர்ஜுன் நடேசன் ஆகியோர் எழுத்து, இந்தி திணிப்பின் பாதிப்பு மற்றும் அதில்
இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க போராடியவர்களின் தியாகங்களை காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம்
பார்வையாளர்களிடம் மிக எளிமையாகவும், அழுத்தமாகவும் நடத்தியிருக்கிறார் கள்.
”மொழி என்பது வெறும் வார்த்தைகள் அல்ல, அது ஒருவரது அடையாளம்”
என்பதையும், அந்த மொழியை காக்க எத்தகைய போராட்டங்களை வழிநடத்தியிருக்
கிறார்கள் என்பதையும், காட்சி மொழியின் மூலம் மிக சிறப்பாக
சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்குரா, சித்தரிக்கப்பட்ட காட்சிகள் மூலம்
இந்தி திணிப்பின் பாதிப்பை அனைத்து மக்களும்
எளிமையான முறையில் புரிய வைத்திருக்கிறார்.
மாபெரும் மொழி போரை உண்மைக்கு நெருக்கமாக நெருடலாக சொல்லி, பார்வையாளர்களின் முழு கவனத்தை
படம் முழுக்க ஈர்த்த, காதல் காட்சிகளின் நீளம் சில இடங்களில்
கவனிக்க வைத்திருக்கிறார். இருப்பினும், இரண்டாம் பகுதியில் காதல் காட்சிகளை
முழுமையாக தவிர்த்து, மொழி போரின் வீரியத்தை சொல்லி
மீண்டும் ரசிகர்களின் முழு கவனத்தையும் படம் முழுக்க ஈர்த்து விடுகிறார்கள்.
இயக்குநரின் கருத்தீயலை எந்த வகையிலும்
பாதிக்காமல், அவர் என்ன சொல்ல நினைத்தை, மக்களுக்கு எதை
புரிய வைக்க முயற்சித்தது அதை முழுமையாக சொல்லி இருக்கிறார்
படம் பார்த்தத்தில், கலைஞரின் பராசக்தி போல் இந்த மீண்டும் “பரசாக்தி”- மக்கள்
மனதில் இடம் பிடித்து வாகை முரசொலி கொட்டு ஒலி மக்கள் முரசு கேட்கும்.



